JB வளாகத்தில் 6 மணி நேர தானியங்கி இயந்திரம், QR குறியீடு செயலிழப்பு; தொடங்கியது உள் விசாரணை

ஜோகூர் பாரு: சுல்தான் இஸ்கந்தர் கட்டிடத்தின் பேருந்து பயணிகள் ஆய்வு மண்டலத்தில் தானியங்கி இயந்திரம், கியூஆர் குறியீடு அமைப்புகள் நேற்று நண்பகல் பழுதடைந்ததை அடுத்து, ஜோகூர் குடிநுழைவுத் துறை உள் விசாரணையைத் தொடங்கியுள்ளது. கட்டிடத்தின் அமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக இந்த அசெளகரியம் ஏற்பட்டதாகவும், ஆனால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு மாலை 6.30 மணியளவில் இரண்டு அமைப்புகளும் முழுமையாக மீட்கப்பட்டதாகவும் அதன் இயக்குநர் ருஸ்டி தரஸ் தெரிவித்தார்.

குறைபாடுகளைத் தீர்ப்பதில் விரைவாகப் பதிலளித்ததற்காக கட்டிட நிர்வாகத்திற்கு நாங்கள் எங்கள் உண்மையான பாராட்டுகளைத் தெரிவிக்கிறோம். பிரச்சினை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணிப்போம் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். மலேசியா மற்றும் சிங்கப்பூரை இணைக்கும் முக்கிய நுழைவுப் புள்ளிகளில் போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்வதில் துறை உறுதியாக இருப்பதாக ருஸ்டி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here