24 குற்றப்பதிவுகளை கொண்ட டிரக் ஓட்டுநர் சுட்டுக் கொலை

கோத்த பாரு, ஜாலான் குபாங் பாசு என்ற இடத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த டிரக் வண்டி ஓட்டுநர் துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். சினார் ஹரியனின் கூற்றுப்படி, கிளந்தான் காவல்துறைத் தலைவர்  டத்தோ முகமட் யூசோஃப் மாமட், 31 வயதான அவர் போதைப்பொருள் உட்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பான 24 முந்தைய குற்றங்களை காவல்துறைப் பதிவு செய்துள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த அவர், வாகனத்தில் இருந்து இறங்கி, என் ஆட்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு ஆக்ரோஷமாக செயல்பட்டார். அவர்கள் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) சம்பவ இடத்தில் சந்தித்தபோது கூறினார்.

துப்பாக்கிச் சூட்டில் அந்த நபர் கொல்லப்பட்டார். மேலும் சம்பவ இடத்தில் ஒரு அரை தானியங்கி கைத்துப்பாக்கி, ஒரு போலி கைத்துப்பாக்கி மற்றும் ஒரு கத்தியை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் சம்பவ இடத்தில் புகையிலை பொட்டலமும் காணப்பட்டது. இது சிறைச்சாலைக்குள் கடத்தப்பட இருந்ததாக பொலிஸார் கருதுகின்றனர். மேலும், இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரித்து வருகிறோம் என்றார். அந்த நபரின் உடல் டெங்கு அனிஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here