கோலாலம்பூர்:
ஜோகூர் மற்றும் பகாங்கில் இன்று காலை 8 மணியளவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நாற்பது பேர் இன்னும் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
11 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் சிகாமாட்டில் உள்ள கம்போங் பத்து படாக் சமூக மண்டபத்தில் உள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று, ஜோகூரில், மாநில பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
அதே நேரத்தில் மெர்சிங்கில் உள்ள பாயா டத்தோ அற்றின் நீர் மட்டம் 1.50 மீட்டராக உயர்ந்து, அபாய அளவைத் தாண்டியதாக அவர் கூறினார்.
மேலும் பகாங்கில், வெள்ளம் காரணமாக வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை, மேலும் மாரான் மாவட்டத்தில் உள்ள கம்போங் பாரு பெர்டானியன் சமூக மண்டபத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நான்கு பேர் இன்னும் நிவாரண மையத்தில் உள்ளனர்.