நாளை முதல் நாடு முழுவதும் ரோன்97 விலை லிட்டருக்கு 3 சென் அதிகரித்து 3.19 ரிங்கிட்டிலிருந்து 3.22 ரிங்கிட்டாக உயரும் என்று நிதி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. ரோன் 95 விலை லிட்டருக்கு 2.05 ரிங்கிட்டாகவும், தீபகற்ப மலேசியாவில் டீசல் லிட்டருக்கு 2.95 ரிங்கிட்டாகவும், கிழக்கு மலேசியாவில் லிட்டருக்கு 2.15 ரிங்கிட்டாகவும் தொடரும். இந்த விலைகள் டிசம்பர் 25 வரை அமலில் இருக்கும்.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகளின் போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் தொடர்ச்சியான நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.