தீபகற்ப மலேசியாவில் தேசிய ஆசிரியத் தொழில் சங்கத்தின் (NUTP) உறுப்பினர்களாக உள்ள 230,000 ஆசிரியர்களில் 40% பேர் மட்டுமே விபத்துக்கள் மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு எதிராக காப்பீடு செய்யப் பதிவு செய்துள்ளனர். NUTP தலைவர் அமினுடின் அவாங் கூறுகையில், காப்பீடு செய்யப்படுவதன் முக்கியத்துவத்தை பலர் அறிந்திருக்கவில்லை என்பதையே குறைந்த எண்ணிக்கையில் எடுத்துக் காட்டுகிறது என்று பெர்னாமா தெரிவித்துள்ளது.
NUTP இன் கீழ் வழங்கப்படும் காப்பீட்டு பிரீமியம் கட்டணம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. இது மாதந்தோறும் கழிக்கப்படும் 5 ரிங்கிட்டில் தொடங்குகிறது. ஆனால் அவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் 220,000 ரிங்கிட் வரை இழப்பீடு கிடைக்கும் என்று இன்று மலாக்கா மஸ்ஜித் தானாவில் எஸ்.கே.ஜெராம் காசோலை வழங்கும் நிகழ்விற்குப் பிறகு அமினுதீன் மேற்கண்ட தகவல்களை கூறினார்.
நாடு முழுவதும் உள்ள 430,000 ஆசிரியர்களை NUTP இல் சேரவும், காப்பீட்டுத் திட்டத்தில் பங்கேற்கவும் அவர் ஊக்குவித்தார். சேவைகள், சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பணிச்சுமை போன்ற முக்கிய பிரச்சினைகளில் ஆசிரியர்களுக்கு தொழிற்சங்கம் வாதிடுவதால், இதுவரை NUTP உறுப்பினர்களாக பதிவு செய்யாத புதிய ஆசிரியர்களை அவ்வாறு செய்யுமாறு அவர் வலியுறுத்தினார்.








