ஜோகூர் பாரு புஸ்பகம் சென்டரில் லோரி சோதனையின் போது அதிருப்தியடைந்த ஓட்டுநர், அங்கிருந்த ஊழியர் ஒருவரை அறைந்தது தொடர்பில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த நவம்பரில் நடந்ததாக ஜோகூர் பாரு செலாத்தான் காவல்துறைத் தலைவர் ரவூப் செலாமட் கூறினார். ஆனால் சம்பவத்தின் வீடியோ சமீபத்தில் வைரலானது என்று பெர்னாமா தெரிவித்துள்ளது.
நவம்பர் 18 ஆம் தேதி மாலை 5.40 மணியளவில் நடந்த சம்பவத்தில் 59 வயதான புஸ்பகம் வாடிக்கையாளர், ஊழியர் ஒருவர் நடத்திய சோதனையில் திருப்தியளிக்காததால், அவர் 28 வயதான நபரை அறைந்தார். தானாக முன்வந்து தீங்கு விளைவித்ததற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 323இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது. பிரிவு 323, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஒரு வருட சிறைத்தண்டனை, RM2,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.









