பாகிஸ்தான்: நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் – 5 பேர் பலி

லாகூர்,பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் குர்ராம் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் பழங்குடியின குழுக்களுக்கு இடையே கலவரம் நடைபெற்று வருகிறது.

அம்மாவட்டத்தில் நிலப்பிரச்சினை தொடர்பாக ஷியா மற்றும் சன்னி பிரிவை சேர்ந்த பழங்குடியினர்கள் இடையே நடைபெற்று வரும் இந்த மோதலில் இதுவரை 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட குர்ராம் மாவட்டத்திற்கு நேற்று வாகனங்களில் உணவு, மருந்து உள்பட பல்வேறு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அப்போது, அந்த வாகனங்களை குறிவைத்து துப்பாக்கி சூடு, ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படையினர் 2 பேர், லாரி டிரைவர்கள் 3 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய கும்பல் 5 டிரைவர்களை கடத்தி சென்றனர். மேலும், நிவாரண பொருட்களை கொண்டு சென்ற வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here