முஸ்லிம்கள் அல்லாத பிற மதத்தினரின் விழாக்கள், இறுதிச் சடங்குகள் அல்லது முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கான முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்களை ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. சர்ச்சைக்குரிய வழிகாட்டுதல்களை அமல்படுத்தும் யோசனையை அமைச்சரவை எதிர்த்ததாக ஒரு வட்டாரத்தை மேற்கோள் காட்டி சின் சியூ கூறினார்.
இன்று கூடும் போது அமைச்சரவை வழிகாட்டுதல்கள் குறித்து விவாதிக்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார். முன்மொழியப்பட்ட விதிகளின் கீழ், முஸ்லிம்களை அவமதிக்கும் மத “பிரச்சாரம்” அல்லது நிகழ்ச்சிகளுடன் கூடிய உரைகள் அல்லது பாடல்கள் எதுவும் இருக்கக்கூடாது. அதே நேரத்தில் வளாகத்தில் இஸ்லாம் அல்லாத பிற மத சின்னங்களைக் காட்சிப்படுத்தக்கூடாது.
முஸ்லிம்களை உள்ளடக்கிய நிகழ்வாக இருந்தால், ஏற்பாட்டாளர்கள் தொடர்புடைய அதிகாரிகளின் அனுமதியையும், இஸ்லாமிய அதிகாரிகளின் “கருத்துகளையும்” பெற வேண்டும். வழிகாட்டுதல்கள் பல்வேறு தரப்பினரிடமிருந்தும்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிமைக் குழுக்கள் மற்றும் சரவாக் துணை அமைச்சரிடமிருந்தும் எதிர்க்கப்பட்டது. அத்தகைய தீர்ப்புகள் மதப் பிளவுகளுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் எச்சரித்திருந்தனர்.
இந்த விவகாரத்தில் தலையிடுமாறு மஇகா அன்வாரைக் கேட்டுக் கொண்டது. அதே நேரத்தில் முன்னாள் சுங்கை பெலெக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு, சமய விவகார அமைச்சர் நயிம் மொக்தாரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.








