சத்தீஷ்கார்: பாதுகாப்பு படையுடனான துப்பாக்கி சண்டையில் 31 நக்சலைட்டுகள் சுட்டு கொலை

பிஜாப்பூர், சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் நேசனல் பார்க் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மாவட்ட ரிசர்வ் படை மற்றும் சிறப்பு அதிரடி படை உள்ளிட்ட வீரர்கள் இணைந்து இன்று காலை சென்றபோது, நக்சலைட்டுகள் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதனை தொடர்ந்து, வீரர்களும் பதிலடியாக அவர்களை நோக்கி சுட்டனர். இந்த சண்டையில் 2 வீரர்கள் மரணம் அடைந்தனர். 2 பேர் காயம் அடைந்தனர். இந்த மோதலில் 31 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

இதன்பின்னர்,போலீஸார் அந்த பகுதியில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கைப்பற்றி உள்ளனர். காயமடைந்த 2 வீரர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என கூறப்படுகிறது. உயிரிழந்த நக்சலைட்டுகளை அடையாளம் காணும் பணி தொடர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here