சாலைநாய்களுக்கு எதிரான கொடுமையை கண்டித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே 100 பேர் பேரணி

கோலாலம்பூர்: விலங்கு நலச் சட்டம் 2015 ஐத் திருத்தவும், விலங்கு கட்டுப்பாட்டை மேம்படுத்தவும் அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக, விலங்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டணி இன்று நாடாளுமன்ற கட்டிடத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது. 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்தப் பேரணியில், உலகளாவிய மனித உரிமைகள் கூட்டமைப்பு (GHRF) தலைவர் எஸ். சசி குமார், கம்பார் நாடாளுமன்ற உறுப்பினர் சோங் ஜெமினிடம் ஒரு குறிப்பாணையை வழங்கினார்.

2024 நவம்பரில் இதேபோன்ற பேரணியில் GHRF 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு குறிப்பாணையை வழங்கிய பிறகு, அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சசி கூறினார். கால்நடை சேவைகள் துறை சாலை விலங்குகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்றும் விலங்கு நலச் சட்டத்தை அமல்படுத்த ஒரு சுயாதீன அமைப்பை நிறுவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பொறி, கருத்தடை, தடுப்பூசி மற்றும் விடுவிக்கும் முறை மூலம் சாலை விலங்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க நாங்கள் முன்மொழிந்துள்ளோம். மாறாக, சாலை விலங்குகளைக் கொல்வது, சுடுவது, விஷம் கொடுப்பதன் மூலம் அரசாங்கம் எளிதான வழியை எடுத்துள்ளது என்று அவர் கூறினார்.

பினாங்கு,சிலாங்கூரில் உள்ள கோல லங்காட் உட்பட சாலை விலங்குகளைக் கையாள அதிகப்படியான பலாத்காரத்தை பயன்படுத்தப்பட்ட பல வழக்குகளை சசி சுட்டிக்காட்டினார். சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை ஆய்வு செய்து, நாடாளுமன்றத்தில் மசோதாவைக் கொண்டுவருவது குறித்து வேளாண்மை உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முகமது சாபுவிடம் பேசுவதாக சோங் கூறினார்.

வீட்டுவசதி மற்றும் உள்ளூர் அரசாங்க அமைச்சர் ங்கா கோர் மிங்குடனும் இந்த விஷயத்தைப் பற்றி மேலும் விவாதிப்பேன் என்று அவர் கூறினார். சாலைநாய்  கொல்லப்பட்டது தொடர்பாக பெசூட் மாவட்ட மன்ரம் தெரெங்கானு அரசாங்கத்திற்கு எதிரான வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 8 ஆம் தேதி கோல தெரெங்கானு உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் என்று வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here