சிவராத்திரி அன்று உச்சரிக்க வேண்டிய சிவ மந்திரம்

சிவபெருமானுக்கு உரிய நாளாக திகழக்கூடிய மகா சிவராத்திரி அன்று பலரும் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்யும் வழக்கம் வைத்திருப்பார்கள். அப்படி வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும்,புதிதாக இந்த சிவராத்திரி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுபவர்களாக இருந்தாலும் அவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை பற்றி பல பதிவில் பார்த்திருப்போம். ஒருவேளை அன்றைய தினத்தில் சிவபெருமானுக்காக விரதம் இருக்க முடியாது, ஆலயம் செல்ல இயலாத சூழ்நிலையில் இருக்கிறோம் என்று வருத்தப்படுபவர்கள் செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீக பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சிவராத்திரி சிவ மந்திரம் பொதுவாகவே மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரியை மகா சிவராத்திரி என்று கூறுவோம். அன்றைய தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் நான்கு கால பூஜையின் நடைபெறும். அன்றைய நாளில்

பலரும் விரதம் இருந்து மதியம் உறங்காமல் மாலை 6:00 மணிக்கு அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு நடக்கக்கூடிய நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டு கண்விழித்து சிவபெருமானை வழிபாடு செய்வார்கள். அப்படி கண்விழித்து சிவபெருமானை நான்கு கால பூஜையிலும் வழிபாடு செய்பவர்களுக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

இந்த வழிபாட்டை நாம் சிவராத்திரி அன்று மாலை 4 மணிக்கு மேல் இரவு ஒரு மணிக்குள் நமக்கு எந்த நேரத்தில் நேரம் கிடைக்கிறதோ அந்த நேரத்தைபயன்படுத்தி செய்து கொள்ளலாம். பூஜை அறையில் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றும் இல்லை. எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் எந்த திசையை பார்த்துக் கொண்டு வேண்டுமானாலும் சிவபெருமானுக்குரிய இந்த அற்புதமான மந்திரத்தை நாம் கூறலாம்.

இந்த மந்திரத்தை குறைந்தது 20 நிமிடத்தில் இருந்தால் அதிகபட்சம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கூறலாம். நிறுத்தி நிதானத்துடன் கூற வேண்டிய ஒரு நான்கெழுத்து மந்திரமாக தான் இந்த மந்திரம் திகழ்கிறது. இந்த மந்திரத்தை கூறும்பொழுது முழுக்க முழுக்க சிவபெருமானை நினைத்துக் கொண்டே கூற வேண்டும். மேலும் இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்யும்பொழுது சிவபெருமான் நம்முடனே இருந்து நமக்கு அனைத்து விதமான ஐஸ்வர்யங்களையும் தர வேண்டும் என்று நேர்மறையான வேண்டுதலை முன்வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மந்திரம் “மவ சிவ”

இந்த நாளெழுத்து மந்திரத்தை முழுமனதோடு சிவபெருமானை நினைத்துக் கொண்டு சிவராத்திரி அன்று யாரொருவர் கூறுகிறார்களோ அவர்களுக்கு சிவபெருமானின் அருள் பரிபூரணமாக கிடைப்பதோடு மட்டுமல்லாமல் சிவராத்திரி இருந்ததற்குரிய பலனையும் பெறுவார்கள்.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here