ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது ரமலான் நோன்பு

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) ரமலான் நோன்பினைத் தொடங்குவார்கள் என்று ஆட்சியாளர்களின் முத்திரைக் காப்பாளர் சையத் டேனியல் சையத் அகமது இன்று அறிவித்தார். நாடு முழுவதும் 29 இடங்களில் சமய அதிகாரிகள் பிறையை காண முயற்சித்த பின்னர், தொலைக்காட்சியில் வழங்கிய நேரடி நிகழ்ச்சிக்குப் பிறகு அறிவிப்பு வந்தது.

ரமலான் தொடக்கத்தின் தீர்மானம் ருக்கியா (சந்திரனைப் பார்ப்பது), ஹிசாப் (வானியல் கணக்கீடுகள்) ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும் என்று ஆட்சியாளர்களின் மாநாடு ஒப்புக்கொண்டதாக ஆட்சியாளர்களின் முத்திரைக் காப்பாளர் முன்பு அறிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here