12 வயது சிறுமியிடம் இருந்து தங்கச் சங்கிலி பறிப்பு

புத்ராஜெயா பிரிசிண்ட் 11 இல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியின் தங்கச் சங்கிலியை ஒருவர் பறித்துச் சென்றதில் அவர் காயமடைந்தார். இந்த சம்பவத்தில் சிறுமியின் கன்னத்தில் காயம் ஏற்பட்டதாக புத்ராஜெயா காவல்துறைத் தலைவர் ஐடி ஷாம் முகமது தெரிவித்தார்.

சிறுமியின் தந்தை மதியம் புகார் அளித்ததாக அவர் கூறினார். சம்பவம் நடந்த நேரத்தில் புகார்தாரர் வீட்டில் இல்லை. சிசிடிவி மூலம் சம்பவத்தை நேரடியாகக் கண்டார். புகார்தாரர் ஒரு ஆடவருக்கும் தனது 12 வயது மகளுக்கும் இடையே சண்டையைப் பார்த்ததாக  அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பச்சை நிற ஜாக்கெட், கருப்பு பேன்ட், கருப்பு தொப்பி, முகமூடி அணிந்த அந்த நபர், கதவைத் தட்டும்போது ஒரு ரப்பர் குழாய், தண்ணீர் கொள்கலனை வைத்திருந்ததாக அவர் கூறினார். பின்னர் அந்த நபர் குளியலறை குழாயுடன் குழாயை இணைத்து கொள்கலனை நிரப்பச் சொன்னார்.

 சிறுமி தண்ணீர் கொள்கலனை அந்த நபரிடம் திருப்பிக் கொடுத்த பிறகு, அவர் அவளுடைய தலைமுடியை இழுத்து, அவள் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்தார் என்று அவர் கூறினார். சிறுமியாலும் அவளுடைய தாயாராலும் அந்த நபரை அடையாளம் காண முடியவில்லை என்று அவர் கூறினார். போலீசார் இன்னும் அந்த நபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று ஐடி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here