பராமரிப்பு மையத்தில் இருந்த 5 மாத ஆண் குழந்தை மரணம்; உடலில் வெளிகாயங்கள் இல்லை என போலீசார் தகவல்

ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் உள்ள கங்கர் பூலாயில் உள்ள ஒரு பகல்நேர பராமரிப்பு மையத்தில் நேற்று ஐந்து மாத குழந்தை இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் குழந்தையின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை. இஸ்கண்டார் புத்ரிய காவல்துறைத் தலைவர் எம். குமரேசன் கூறுகையில், 30 வயதுடைய குழந்தை பராமரிப்பாளரால் ஆண் குழந்தை மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டது.

குழந்தை சுல்தானா அமினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்று குமரேசன் கூறினார். குழந்தையின் தாய்  31, நேற்று மாலை 4.24 மணிக்கு புகாரினை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக குமரேசன் கூறினார். ஆனால் இறப்புக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது. குழந்தை இறப்புத் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here