கராச்சி:
பாகிஸ்தானில் இயங்கிவரும் அமெரிக்க விரைவு உணவு நிறுவனமான KFC கடைகள்மீது கடந்த சில வாரங்களாக 10க்கும் மேற்பட்ட முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, 170க்கும் அதிகமானோரை அன்னாட்டுக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் வேளையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் அதன் நட்பு நாடான அமெரிக்காவுக்கு எதிராக வெறுப்புணர்வை வெளிப்படுத்தவும் KFC உணவகங்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், தெற்கு துறைமுக நகரான கராச்சி, கிழக்கு நகரான லாகூர் உள்ளிட்ட பெருநகர்களின் கேஎஃப்சி கடைகள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.