மலேசியாவிற்கு நான்கு நாள் பயணமாக வந்துள்ள கொசோவோ குடியரசின் தலைவர் டாக்டர் வ்ஜோசா ஒஸ்மானி சத்ரியுவுக்கு (Vijosa Osmani Sadriu) இன்று பெர்டானா புத்ரா கட்டிடத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் அவர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு (Order of Independence) விருதை வழங்கினார். இந்த விருது கொசோவோ நாட்டின் விடுதலைக்கு ஆற்றிய பங்கிற்காக வழங்கப்படும் உயரிய விருதாகும்.
கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதியன்று கொசோவோவின் சுதந்திரத்திற்கு ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி மலேசியாவின் ஐந்தாவது முன்னாள் பிரதமர் மறைந்த துன் அப்துல்லா அகமது படாவிக்கும் அவ்விருதை அதிபர் Osmani வழங்குவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பயனத்தின் மூலம் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், குறிப்பாக வர்த்தகம், முதலீடு, கல்வி, மக்களிடையேயான தொடர்பு ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.