கோலாலம்பூர் :
கொசோவோ நாட்டின் முதல் தூதரகம் நேற்று கோலாலம்பூரில் திறக்கப்பட்டது, இதன் மூலம் மலேசியாவிற்கும் கொசோவோவிற்கும் இடையிலான உறவுகள் ஒரு பெரிய ஆரம்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிகழ்வை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இருதரப்பு உறவுகளில் “ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்” என்று விவரித்தார்.
நேற்று மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வமாகத் திறந்துவைக்கப்பட்ட தூதரகம், வர்த்தகம், முதலீடு, கல்வி, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளில் மூலோபாய செயற்பட்டு, இருநாடுகளின் கூட்டுறவை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் “மலேசியாவின் ஹலால் சான்றிதழ் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, மேலும் எங்கள் நாட்டுத் தயாரிப்புகளின் ஏற்றுமதியை எளிதாக்குவது மட்டுமல்லாமல், முஸ்லிம் பெரும்பான்மை சந்தைகளுக்கு கொசோவோ அதன் சொந்த ஏற்றுமதியை ஊக்குவிப்பதிலும் ஆதரவளிக்கும்” என்று கொசோவோ அதிபர் டாக்டர் வ்ஜோசா ஒஸ்மானி சத்ரியுவுடன் நடந்த ஒரு கூட்டு ஊடக மாநாட்டில் அன்வர் கூறினார்.