ஜாலான் கிள்ளான் லாமா உணவகத்திற்குப் பின்னால் உள்ள ஆற்றில் மிதந்த நிலையில் புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் கண்டெடுப்பு

கோலாலம்பூர்:

இங்குள்ள ஜாலான் கிள்ளான் லாமாவில் உள்ள ஒரு உணவகத்திற்குப் பின்னால் உள்ள ஆற்றில் நேற்று ஒரு குழந்தையின் சடலம் மிதந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பிற்பகல் 3 மணியளவில் கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) செயல்பாட்டு மையத்திற்கு MERS999தகவல் கிடைத்தது என்றும், அதைத் தொடர்ந்து, செபுத்தே தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த எட்டு பணியாளர்கள், ஒரு தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். “தீயணைப்பு வீரர்கள் குழந்தையின் உடலை மீட்டு, மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைத்தனர்,” என்றும் கோலாலம்பூர் JPBM இன் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here