ஜப்பானின் ஹிரோஷிமாவில் நேற்று நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனை முடித்த பின்னர் பிரதமர் மோடி பப்புவா நியூ கினியா நாட்டிற்கு செல்கிறது. அப்போது விமான நிலையத்தில் வைத்து பிரதமரை அந்நாட்டு பிரதமர் வரவேற்றார்.
பொதுவாக, சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வரும் எந்த தலைவர்களுக்கு அந்நாட்டு சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளிப்பதில்லை. ஆனால், பிரதமர் மோடிக்கு சிறப்பு விதிவிலக்கு அளிக்கப்பட்டு முழு சம்பிரதாயப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.