இயக்கவியல் துறையில் மலேசியா முன்னோடியாக திகழ பாடுபடும்: கோபிந்த்

கோலாலம்பூரில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தலைமைத்துவ மாநாட்டை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். நாடு முழுவதிலுமிருந்து தனியார் நிறுவன உயர் அதிகாரிகளும், நிறுவன உரிமையாளர்களும் இந்தத் தலைமைத்துவ மாநாட்டில் கலந்துகொண்டனர்.

நம்பிக்கையுடன் கூடிய, பொறுப்பாற்றல் மிக்க, அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய இலக்கவியல் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்கும் கடப்பாட்டில் மலேசியா உறுதியாக உள்ளது என்கிற நிலைப்பட்டை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்தினார்.

உலக பொருளாதார மன்றம் (WEF) “நுண்ணறிவு காலம்”என குறிப்பிடும் காலகட்டத்திற்குள் மலேசியா நுழைவதை இலக்கவியல் அமைச்சர் சுட்டினார். நுண்ணறிவு காலகட்டம் செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினி, உயிரியல்தொழில்நுட்பம், மற்றும் மேம்பட்ட இணைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் உருவான ஒரு யுகம். மேம்பட்ட இணைப்புத் தொழில்நுட்பங்களின் இணைவு மூலம் உருவாகும் இந்த புதிய காலத்தில், நம்பிக்கை என்பது முழு அமைப்பின் செயல்பாட்டை இயங்கச் செய்யும் அடித்தளமாகும்.

இந்த மாற்றம் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், இந்தப் புரட்சியில் சமூகங்கள் எவ்வாறு வாழ்கின்றன. பொறுப்புகளை ஏற்கின்றன. தொழில்நுட்பத்தை எவ்வாறு நிர்வகிக்கின்றன என்பதை மறுவரையறை செய்கின்றது.

இந்த மாற்றத்தை முன்னெடுப்பதில், தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகம் (NAIO) மற்றும் அதன் ஆறு நிபுணத்துவம் வாய்ந்த குழுக்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த குழுக்கள் அரசாங்கம், தொழில், கல்வி மற்றும் சமூக அமைப்புகளின் 170க்கும் மேற்பட்ட நிபுணர்களுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு சுதந்திரம், ஒழுங்குமுறை, நெறிமுறைகள், பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டை சார்ந்தத் திட்டங்களை உருவாக்குகின்றன.

ASEAN நாடுகளுடன் நம்பிக்கையுடன் கூடிய சூழலை உருவாக்குவதற்கான முயற்சிகளை விரிவுபடுத்துவதில்கோபிந்த் சிங் டியோ ஆர்வம் தெரிவித்தார். இந்த ஆண்டு ஆகஸ்டில் கோலாலம்பூரில் நடைபெறும் ASEAN செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் அது தொடர்பான விவாதங்கள் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

இலக்கவியல் மாற்றங்கள் துரிதப்படுத்தப்படும் போது,கொள்கை அடிப்படையிலான, பங்கேற்பு முறைமைகள் கொண்ட அணுகுமுறை, நாட்டை உலக மின்னியல்பொருளாதாரத்தில் முன்னணியில் நிறுத்துகிறது.  மலேசியாவில் துரிதமாகும் இலக்கவியல் உருமாற்றம்,கொள்கை அடிப்படையிலான மற்றும் பங்கேற்பு சார்ந்த அணுகுமுறையானது நாட்டை உலகலாவிய ரீதியில் மின்னியல் பொருளாதாரத்தில் முன்னணியில் நிறுத்துகிறதுஎன அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here