செராஸ் ஹோம்ஸ்டேயில் 2 சிங்கப்பூரர்கள் இறந்து கிடந்தனர்

செராஸ் தாமான் டெய்ன்டன் வியூவில் உள்ள ஒரு தங்குமிடத்தில் பகுதியளவு சிதைந்த நிலையில் இரண்டு சிங்கப்பூரர்களின் உடல்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டன. செக்-அவுட்டின் போது அவர்களை அடைய முடியாததால், ஹோம்ஸ்டே ஊழியர் கதவை திறந்து உள்ளே சென்றபோது  ஒரு அறையில் 43 வயது ஆண்  33 வயது பெண்ணின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக செராஸ் காவல்துறைத் தலைவர் ஐடில் போல்ஹாசன் தெரிவித்தார்.

அறையில் உள்ள ஒரு துருப்பிடிக்காத எஃகு பாத்திரத்தில் எரிந்த பொருட்கள் கொண்ட ஒரு கரி பர்னர், பயன்படுத்தப்படாத இரண்டு பெட்டிகள் கரி, கெத்தமைன் என சந்தேகிக்கப்படும் ஒரு பொருள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக ஐடில் கூறினார்.

அறையின் ஏர் கண்டிஷனர், ஜன்னல்கள், பிளாஸ்டிக் குப்பை பைகள், டேப்பால் மூடப்பட்டிருந்தன என்று அவர் மேலும் கூறினார். இருவரும் முழுமையாக உடையணிந்திருந்தனர். அவர்களின் உடல் சிதைவின் ஆரம்ப கட்டத்தில் இருந்ததோடு துர்நாற்றம் வீசியது என்று ஐடில் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். வெளிப்புற காயங்களோ அல்லது குற்றச் செயல் நடந்தற்கான அறிகுறிகள் எதுவுமில்லை. இருவருக்கும் இடையிலான உறவை காவல்துறை இன்னும் தீர்மானிக்கவில்லை என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here