ரஷ்யாவில் நெடுஞ்சாலை மேம்பாலம் ஒன்று இடிந்து ரயில் மேல் விழுந்ததில் எழுவர் உயிரிழந்தனர்.
பிரையன்ஸ்க் (Bryansk) வட்டாரத்திலுள்ள அந்த மேம்பாலம் இடிந்ததில் அதில் பயணம் செய்துகொண்டிருந்த கனரக வாகனங்களில் சில ஓடும் பயணிகள் ரயில் மேல் விழுந்தன. விபத்தில் 31 பேர் காயமுற்றதாக கூறுப்படுகிறது.
மேலும் ரயிலில் பயணம் செய்தவர்களைத் தீயணைப்பு மீட்புத் துறை அடையாளங்கண்டு வருவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.








