நாட்டின் பொருளாதாரத்தைச் சிறந்த முறையில் நிர்வகித்து மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்த மடானி அரசாங்கத்திற்கு, பொது சேவைத் துறை ஊழியர்களுக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தமது பாராட்டுகளைத் தெரிவித்து கொண்டார்.
மேலும் மலேசியாவின் திறன்களைக் குறைத்து மதிப்பிடுபவர்கள் இருக்கின்ற போதிலும் கடின உழைப்பு மற்றும் ஒத்துழைப்புடன் அரசாங்க ஊழியர்கள் மூலம் அனைத்து சவால்களும் வெற்றிகரமான முறியடிக்கப்பட்டுள்ளதாக இன்று, இஸ்தானா நெகாராவில் தமது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற 2025-ஆம் ஆண்டிற்கான உயரிய விருதுகள் வழங்கும் விழாவில் சுல்தான் இப்ராஹிம் அவ்வாறு கூறினார்.









