கேரளா அருகே நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல்- 22 பேரின் நிலை என்ன?

கேரளா அருகே நடுக்கடலில் எம்.வி. வான் ஹாய் 503 என்ற சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்புவில் இருந்து வந்து கொண்டிருந்த கப்பலில் வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கப்பலில் 22 ஊழியர்கள் இருந்த நிலையில், பலரும் கடலில் குதித்துவிட்டதாக கூறப்படுகிறது.4 பேர் மாயமாகி இருப்பதாகவும் 5 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து இந்திய கடலோர காவல் படையின் பல்வேறு ரோந்து கப்பல்கள் மீட்புப் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here