தம்பின்: நெகிரி செம்பிலானில் உள்ள ஒரு சந்திப்பில் நேற்று இரவு ஒரு கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இரண்டு கட்டுமானத் தொழிலாளர்கள் இறந்தனர். தம்பின் காவல்துறைத் தலைவர் அமிருதியன் சரிமான் கூறுகையில், இந்த விபத்து இரவு 9 மணியளவில் நடந்ததாகவும், மிட்சுபிஷி எக்ஸ்பாண்டர், ஹோண்டா சி100 மோட்டார் சைக்கிள் ஆகியவை மோதியதாகவும் கூறினார். பாதிக்கப்பட்டவர்கள் 32 மற்றும் 20 வயதுடையவர்கள் என்று பெர்னாமா தெரிவித்துள்ளது.
மிட்சுபிஷி எக்ஸ்பாண்டரின் 34 வயதான ஓட்டுநர் தம்பின் மருத்துவமனை ஊழியர்கள் குடியிருப்புப் பகுதியிலிருந்து தம்பின் நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது. சந்திப்பில், ஓட்டுநர் சமிஞ்சை விளக்கு (பச்சை) இருந்ததால் அவர் சென்று கொண்டிருந்த போது உள்ளூர்வாசி ஒருவரும், வங்கதேச ஆடவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் வலதுபுறத்தில் இருந்து நுழைந்து வாகனத்தின் முன்பக்கத்தில் மோதியது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பயணி சம்பவ இடத்திலேயே இறந்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தம்பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது இறந்தார். மிட்சுபிஷி எக்ஸ்பாண்டர் ஓட்டுநருக்கு மார்பில் லேசான காயம் ஏற்பட்டது. கவனக்குறைவாக அல்லது ஆபத்தான முறையில் வாகனமோட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக, 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.









