இங்கிலாந்தில் இந்தியர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் எண்ணிக்கை 23% சதவீதம் அதிகரிப்பு..!

பிரிட்டனில் இந்தியர்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 23 சதவீதம் அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் இணைந்து பிராணட் தோர்ன்டன் என்ற உலகளாவிய நிதி ஆலோசனை நிறுவனம் மேற்கொண்ட இந்தியா மீட்ஸ் பிரிட்டைன் டிராக்கர் (India Meets Britain Tracker) வருடாந்திர ஆய்வறிக்கை மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இந்தியர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் இந்த ஆண்டு 23 சதவீதம் உயர்ந்து 1,194 ஆக உள்ளது. ஒருங்கிணைந்த வருமானம் முந்தைய ஆண்டு 68.09 பில்லியன் பவுண்ட் ஆக இருந்த நிலையில், 2024-ல் 72.14 பில்லியன் பவுண்ட் ஆக அதிகரித்துள்ளது.

இங்கிலாந்து முழுவதும் 1,26,720 பேர் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு 8 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.

விப்ரோ ஐ.டி. சர்வீசஸ் நிறுவனம் 448 சதவீத வருவாய் வளர்ச்சியை பெற்றுள்ளது. ஜோஹோ கார்பரேசன் லிமிடெட்டின் வளர்ச்சி 197 சதவீதம் அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here