10ஏ எடுத்த அனைத்து SPM மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் இடங்கள் உறுதி: கல்வி அமைச்சகம்

கடந்த ஆண்டு எஸ்பிஎம் (SPM) தேர்வில் 10ஏ மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்று மெட்ரிகுலேஷன் படிப்புக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும், இனம் அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல் இடங்கள் வழங்கப்படும். நேற்றைய அமைச்சரவை அமைச்சர்கள் கூட்டத்தில் இது ஒப்புக் கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சகம் (MOE) தெரிவித்துள்ளது.

இதில் 10A பெற்று A- முடிவுகளைப் பெற்ற மாணவர்களும் அடங்குவர். கடந்த ஆண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த கொள்கையைப் பின்பற்றும்  வகையில் அமைந்திருக்கிறது. 2024 SPM தேர்வில் சிறந்து விளங்கும் அனைத்து மாணவர்களுக்கும் தங்கள் படிப்பைத் தொடர வாய்ப்பு இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அது இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மெட்ரிகுலேஷன் படிப்புக்கான தற்போதுள்ள பூமிபுத்ரா ஒதுக்கீடு முறை பாதிக்கப்படாமல் உள்ளது என்றும் அது மேலும் கூறியது. நாட்டின் எதிர்கால சொத்துக்களான மாணவர்களின் நலனுக்காக கல்விக்கான அணுகலை மேம்படுத்த முடியும் என்பதை மடானி அரசாங்கம் தொடர்ந்து உறுதி செய்யும் என்று அது கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here