கிளானா ஜெயா எல்ஆர்டி பாதையில் இன்று காலை பயணிகள் தண்டவாளத்தில் அத்துமீறி நுழைந்ததால் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன. சுபாங் ஆலம் எல்ஆர்டி நிலையத்தின் தண்டவாளப் பகுதிக்குள் ரயில் ஒன்று ரயில் பிளாட்பாரத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது, காலை 8 மணியளவில் பயணி ஒருவர் நுழைந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக ரேபிட் ரெயில் சென் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.
பலத்த காயமடைந்த பயணியை, காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சேர்ந்த குழுவினர் மீட்டனர். பயணி சிகிச்சைக்காக கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
காவல்துறை விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. தங்களின் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்று ரேபிட் ரெயில் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. காலை 10.22 மணிக்கு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கின.
பிப்ரவரியில், தித்திவாங்சா எல்ஆர்டி நிலையத்தில் ஒரு பார்வையற்ற நபர் தனது சமநிலையை இழந்து தண்டவாளத்தில் விழுந்து இறந்தார். கடந்த மாதம், புசாட் பண்டார் பூச்சோங் எல்ஆர்டி நிலையத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. அங்கு 60 வயது மதிக்கத்தக்க ஒரு தைவான் நபர் தண்டவாளத்தில் விழுந்து, வந்து கொண்டிருந்த ரயிலில் அடிபட்டு இறந்தார்.









