போலி 100 ரிங்கிட் நோட்டுகளைப் பயன்படுத்தி ஹோட்டல் பில் செலுத்திய 3 சீனப் பெண்கள் கைது

‎சீனாவைச் சேர்ந்த மூன்று பெண்களில் ஒருவர் தங்கள் ஹோட்டல் 8,700 ரிங்கிட் பில்லுக்கு போலி 100 ரிங்கிட் நோட்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தியதை அடுத்து, அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

18 முதல் 47 வயதுக்குட்பட்ட பெண்கள், கள்ளப் பணத்தில் ஈடுபட்டுள்ள ஒரு கும்பலின் முகவர்கள் என்று நம்பப்படுவதாக டாங் வாங்கி காவல்துறைத் தலைவர் சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் தெரிவித்தார்.

87 போலி 100  ரிங்கிட் நோட்டுகள், ஒரு போலி 50 ரிங்கிட், 20 ரிங்கிட் நோட்டு, மூன்று ஐபோன்கள், இரண்டு Louis Vuitton  பைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here