பைரவரை விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு

கால பைரவரை இடைவிடாமல் தொடர்ந்து விரதம் இருந்து வழிபட்டு வருபவர்களுக்கு ஆகம தந்திர சாஸ்திரங்களில் உயர்ந்த நிலை கிடைக்கும். வாழ்க்கையில் பல தரப்பட்ட காரணங்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உரிய பரிகாரங்களாக கால பைரவர் வழிபாட்டு முறைகளை வகுத்து தந்துள்ளனர். பைவரை அஷ்டமி, ஞாயிற்றுகிழமைகள் மட்டுமின்றி தினமும் வணங்கி வந்தால்,

  • தலை குனியா வாழ்க்கை.
  • சுப மங்களம்
  • தீயவினைகள் முற்றிலும் அழிவு.
  • பிறவியின் பலனை முழுவதுமாக உணர்தல்.
  • தடையில்லாமல் சவுகரியம் ஏற்படுதல்.
  • கடன் நீங்குதல்
  • எதிரிகள் தொல்லையில் இருந்து விடுதலை.
  • வழக்குகளில் இருந்து விடுதலை.
  • கிரக தோஷங்களின் பாதிப்பு விலகுதல்.
  • பிறவியை புனிதப்படுத்துதல்.
  • இறைவனை எளிதாக உணர்தல்.
  • உள்ளிட்ட பல நன்மைகளை பெற முடியும். வளர்பிறை அஷ்டமியில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபாடு செய்வது 16 செல்வங்களையும் நமக்கு பெற்றுத் தரும். வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரம், சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து, 11 தீபங்கள் ஏற்ற வேண்டும்.
  • ஏழரை சனியால் பாதிக்கப்பட்டவர்கள் துன்பங்கள் குறைய பைரவர் சன்னிதானத்தில் 2 மண் அகல் விளக்குகளை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, சிறிதளவு கருப்பு எள் இட்டு, திரி போட்டு தீபம் ஏற்றி மனதார வழிபாடு செய்ய வேண்டும். காலபைரவர் பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆள்வதால் இவருக்கு கோவிலில் பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி, பஞ்ச விளக்குகளை ஏற்ற வேண்டும். அதாவது 5 அகல் விளக்குகளை எடுத்து கொள்ளுங்கள். அதில் ஒவ்வொரு விளக்கிலும் ஒவ்வொரு வகையான எண்ணெய் ஊற்றி தனித்தனியே தீபத்தை ஏற்ற வேண்டும்.
  • நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்கள் தான் பஞ்ச தீப எண்ணெய்கள் என்று குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு விளக்கிலும் இந்த ஒவ்வொரு எண்ணெய்களை ஊற்றி, பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்றி, பைரவருடைய மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் எல்லா விதமான பிரச்சனைகளும் தீரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here