காஸா நிவாரணத்திற்காக மலேசியா கூடுதலாக RM100 மில்லியன் வழங்கும்: அன்வார்

காஸாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு உதவ மலேசியா கூடுதலாக 100 மில்லியன் ரிங்கிட் உதவியை வழங்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம்  நேற்றிரவு அறிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காஸா   மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட மானியத்திற்கு கூடுதலாக இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். “இது வெறும் ஆரம்பம் தான்” என்று பேரணியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர் மத்தியில் அவர் கூறினார்.

டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெற்ற காஸாவுக்கான ஒற்றுமை பேரணியில் பேசிய பிரதமர், மலேசியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் காஸாவை மீண்டும் கட்டியெழுப்ப உதவி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். காஸா மக்களுக்கு உணவு மற்றும் உதவியை மறுக்கும் இஸ்ரேலியர்களின் நடவடிக்கைகள் “மனிதர்களின் செயல்கள் அல்ல, இவை விலங்குகள்” என்று அன்வர் கூறினார்.

பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் அட்டூழியங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அழுத்தம் கொடுப்பதில் முஸ்லிம்களும் அனைத்துலக சமூகமும் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நாம் தொடர்ந்து முன்னேற வேண்டும். முன்னேற சுமையாக உணர வேண்டாம். ஆம், அது சோர்வூட்டுகிறது. சில நேரங்களில் ஏமாற்றமளிக்கிறது. சில நேரங்களில் அது நம்பிக்கையற்றதாக உணர்கிறது… அப்பொழுது இறைவனை  நம்புங்கள்” என்று அவர் கூறினார்.

உலகிற்கு ஒரு முன்மாதிரியாகச் செயல்படக்கூடிய ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப, தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்தி, பிரிவினையை நிராகரிக்குமாறு மலேசியர்களை அன்வார் வலியுறுத்தினார். ஒற்றுமையுடன், நாம் குரல் கொடுத்து, மற்ற நாடுகள் அரிதாகவே செய்யும் ஒன்றைச் செய்ய முடியும். பிரிவினையின் விதைகள் தேசத்தையும் நாட்டையும் அழிக்க விடாதீர்கள்” என்று அவர் கூறினார்.

காஸா உட்பட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவக்கூடிய சுதந்திரமாகவும், முற்போக்காகவும், நாட்டைப் பாதுகாக்க இளைஞர்கள் எழுச்சி பெற வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். காஸா மக்களே, “மலேசியா உங்களைத் தனியாக விடாது.” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here