முஹிடின் யாசினின் மருமகன் அட்லானின் பாஸ்போர்ட்டை ரத்து செய்வீர்: எம்ஏசிசி அரசாங்கத்திடம் கோரிக்கை

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், பெர்சத்து தலைவர் முஹிடின் யாசினின் மருமகன் அட்லான் பெர்ஹானின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு உள்துறை அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது. ஊழல் தடுப்பு நிறுவனத்தால் அட்லானைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக MACC தலைமை ஆணையர் அஸாம் பாக்கி தெரிவித்தார். அவர் ஒரு அமைச்சகத்தின் வெளிநாட்டு ஊழியர் பயோமெட்ரிக் தரவு திட்டம் குறித்த விசாரணையில் உதவுவதற்காக தேடப்படுகிறார்.

நாங்கள் நேற்று விண்ணப்பத்தை தாக்கல் செய்தோம், மேலும் உள்துறை அமைச்சகம் விண்ணப்பத்தை அங்கீகரிக்கும் என்று நம்புகிறோம் என்று அவர் கூறியதாக பெரித்த ஹரியான் தெரிவித்துள்ளது. அட்லான் தற்போது மேற்கு ஆசிய நாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த நாட்டோடு மலேசியாவிற்கு எந்த நாடுகடத்தல் ஒப்பந்தமும் இல்லை. இருப்பினும், (அட்லானை) மீண்டும் இங்கு கொண்டு வருவது குறித்து அந்த நாட்டோடு பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கிறோம்.

அட்லான்,  அவரது வழக்கறிஞர் மன்சூர் சாத் ஆகியோரை ஒரு அமைச்சகத்தில் வெளிநாட்டு ஊழியர் பயோமெட்ரிக் தரவுகளைப் பதிவு செய்தல், ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் சேமித்தல் தொடர்பான ஒரு திட்டத்தின் விசாரணையில் உதவுமாறு MACC கோருகிறது. அட்லான், மன்சூரை மே 2024 இல் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக MACC முன்பு குறிப்பிட்டிருந்தாலும், இருவரும் பின்னர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி ஓடுவதை மறுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here