
ஷா ஆலம்: புடி மடானி RON95 (புடி95) அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விரைந்து செல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு மானிய விலையில் லிட்டருக்கு RM1.99 விலை மாறாமல் உள்ளது என்று டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறுகிறார்.
பெட்ரோல் நிலையங்களில் நெரிசலைக் குறைக்க உதவும் வகையில், ஆயுதப்படை வீரர்கள், காவல்துறை, ரஹ்மா (STR) பெறுநர்கள் போன்ற சில குழுக்களுக்கு மானியம் முன்கூட்டியே வழங்கப்படுவதாக நிதியமைச்சர் II கூறினார். உங்கள் டேங்கை நிரப்ப பீதியடையவோ அல்லது அவசரப்படவோ தேவையில்லை.
உங்கள் கார் அரை டேங்கில் இருந்தாலும், நீங்கள் 30ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு எந்த நேரத்திலும் எரிபொருள் நிரப்பலாம். RM1.99 விலையில் உங்கள் உரிமை அப்படியே இருக்கும் என்று அவர் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) ஒரு ஊடக சந்திப்பின் போது கூறினார்.
தகுதியுள்ள மலேசியர்கள் Budi95 இன் கீழ் லிட்டருக்கு RM2.05 இல் இருந்து RN95 மானிய விலையில் 1.99 விலையில் வாங்க முடியும் என்று அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது. தகுதியுள்ள ஒவ்வொரு வாகன ஓட்டியும் மாதத்திற்கு 300 லிட்டர் வரை மானிய விலையில் RON95 பெற உரிமை பெறுவார்கள்.
இந்தத் திட்டம் செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்கி, காவல் படைகள் மற்றும் ஆயுதப் படைகளின் உறுப்பினர்களுக்கு கட்டங்களாக அறிமுகப்படுத்தப்படும். செப்டம்பர் 28 ஆம் தேதி ரஹ்மா உதவி (STR) பெறுநர்கள்; மை கார்டு மற்றும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் உள்ள ஒவ்வொரு மலேசியருக்கும் செப்டம்பர் 30 முதல் என்று அவர் தெரிவித்தார்.
லிட்டருக்கு RM1.99 ஆக எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து கேட்டபோது அமீர் ஹம்சா, RON95 இன் லிட்டருக்கு RM1.99 மானிய விலை “சிறிது காலத்திற்கு” நடைமுறையில் இருக்கும் என்று கூறினார். நாங்கள் சிறிது காலம் அதனை தொடருவோம். ஆனால் அது அனைத்தும் சூழ்நிலைகளைப் பொறுத்தது என்று அவர் கூறினார்.








