ஆந்திராவில் 15 பில்லியன் டாலர் மதிப்பில் ஏஐ மையம் அமைக்கிறது கூகுள் நிறுவனம்

விசாகப்பட்டினம்:உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்று கூகுள். இந்த நிறுவனம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளது.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் மதிப்பில் கூகுள் ஏஐ மையம் அமைக்க உள்ளது என மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.இந்திய இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புக்கு கூகுளின் ஏஐ மையம் உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.அமெரிக்காவிற்கு வெளியே கூகுள் நிறுவனம் செய்யக்கூடிய மிகப்பெரிய முதலீடு இதுதான் என்று சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here