செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) இடைநிலைப் பள்ளியில் கத்தியால் குத்தப்பட்டு இறந்த மாணவியின் உடலை அவரது குடும்பத்தினர் உரிமை கோரியுள்ளனர். மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் (யுஎம்எம்சி) நோயியல் துறையில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு, புதன்கிழமை (அக்டோபர் 15) காலை 7.30 மணிக்கு பாதிக்கப்பட்டவரின் உடல் அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா ஓசிபிடி உதவி ஆணையர் ஷம்சுடின் மாமத் உறுதிப்படுத்தினார்.
இன்று காலை 7.30 மணிக்கு குடும்பத்தினர் பெற்று கொண்டதாக மேலும் தகவல்கள் விரைவில் செய்தியாளர் சந்திப்பில் வழங்கப்படும்” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார். பெட்டாலிங் ஜெயா நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், 14 வயது ஆண் சந்தேக நபர் காலை 8.40 மணியளவில் போலீஸ் ரோந்து வாகனத்தில் வளாகத்திற்கு வந்ததாகக் காட்டியது.
ரிமாண்ட் விண்ணப்பம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஏசிபி ஷம்சுடின் தெரிவித்தார். அவர் விசாரணைக்காக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் தலைமையகத்திற்கு கொண்டு வரப்படுவார் என்று அவர் மேலும் கூறினார். இந்த சம்பவத்தில், பெண் மாணவி ஒரு ஆண் மாணவனால் குத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் பள்ளி வளாகத்திற்குள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக காவல் துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார். அதே பள்ளியில் படிக்கும் 14 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.









