துபாயில் இந்திய மாணவர் திடீர் உயிரிழப்பு

துபாய்:கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக துபாயில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் வைஷ்ணவ் (வயது 18). இவர் துபாயில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் துபாய் சர்வதேச கல்வி நகரில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வைஷ்ணவ் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக கூறினார்கள்.

இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here