சிலாங்கூரில் உள்ள தாமான் ஸ்ரீ திமா, பலாக்கோங் இன்று மாலை சுமார் மூன்று ஏக்கர் மலைக் காடுகள் தீப்பிடித்து எரிந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
இன்று இரவு ஒரு அறிக்கையில், பண்டார் துன் ஹுசைன் ஒன், ஸ்ரீ கெம்பாங்கன் தீயணைப்பு நிலையங்கள் இரவு 7.02 மணிக்கு அவசர அழைப்பு வந்ததை அடுத்து சுமார் 13 கி.மீ தொலைவில் உள்ள இடத்திற்கு பணியாளர்களை அனுப்பியதாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. அவர்கள் இரவு 7.25 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர்.
தற்போது பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று செயல்பாட்டுத் தளபதி அஹ்மத் ஷாஹிர் அப்துல் ரஹ்மான் கூறினார். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.








