இலக்கு 220 மில்லியன் ரிங்கிட் – வசூல் 251.44 மில்லியன் ரிங்கிட்; PTPTN இன்SSPN சேமிப்பு மாதத்தின் சாதனை

கோலாலம்பூர்: தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தால் (PTPTN) ஏற்பாடு செய்யப்பட்டு செப்டம்பர் 26 முதல் நவம்பர் 2 வரை  நடைபெற்ற SSPN சேமிப்பு மாதம் (BMS) 2025இல்  மொத்தம் 251.44 மில்லியன் ரிங்கிட் அல்லது ஆரம்ப இலக்கான 220 மில்லியன் ரிங்கிட்டும் ஒப்பிடும்போது 114.30 விழுக்காடு SSPN சேமிப்பு வைப்புத்தொகையைப் பெற்று வெற்றியைப் பதிவு செய்தது.

தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தின் (PTPTN) தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிசா அப்துல் ரஹீம், இந்த சாதனை மலேசியர்களிடையே தங்கள் குழந்தைகளின் உயர்கல்வியின் எதிர்காலத்திற்காக சேமிப்பதன் முக்கியத்துவம் குறித்த அதிகரித்து வரும் விழிப்புணர்வைப் பிரதிபலிப்பதாகக் கூறினார். BMS 2025 இன் சாதனை, சேமிப்பு கலாச்சாரத்தை வலுப்படுத்துவதற்கான உத்தியின் செயல்திறனையும், நம்பகமான கல்வி சேமிப்பு கருவியாக SSPN சேமிப்புக்கு சமூகத்தின் வலுவான ஆதரவையும் பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.

பெற்றோர்களிடையே தங்கள் குழந்தைகளின் எதிர்காலக் கல்வியைத் திட்டமிடுவதற்கான அதிகரித்து வரும் விழிப்புணர்வை இது காட்டுகிறது என்றும், இதனால் அவர்களை ஆரம்பத்திலிருந்தே ஒழுக்கமான சேமிப்பு மூலம் ‘குடும்ப சூப்பர் ஹீரோக்களாக’ மாற்றுகிறது என்றும் அவர் கூறினார். எதிர்காலத்தில் பெரிய நிதிச் சுமை இல்லாமல் குழந்தைகள் உயர்கல்வியை அணுகுவதை உறுதி செய்யும் முக்கிய நிதித் திட்டமிடுபவர்களாக பெற்றோரின் பங்கை உயர்த்துவதற்காக BMS உருவாக்கப்பட்டது என்று நோர்லிசா கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here