கோலாலம்பூர்:
PKR கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான ரஃபிஸி ரம்லி, பல ஆண்டுகளுக்கு முன்னர் தனது முகநூலில் வெளியிட்ட ஒரு பதிவு மீண்டும் சமூகவலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. அரசியலுக்குள் தனது வருகைக்கு பின்னால் உள்ள உண்மையான காரணத்தை அந்த பதிவில் ரஃபிஸி பகிர்ந்துள்ளார்.
அதில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தாம் அரசியலில் ஈடுபட முடிவு செய்தது, நாட்டில் ஆழமாகப் பேணப்பட்டிருந்த லஞ்ச ஊழலின் மீது இருந்த கடும் வெறுப்பே காரணமாகும் என்று தெரிவித்துள்ளார்.
அந்த காலத்தில், “லஞ்சம் கொடுக்காமல் தொழில் செய்ய முடியாது” என்று கூறும் மனப்போக்கை உடைப்பதே தனது நோக்கமாக இருந்ததாகவும் ரஃபிஸி பதிவு செய்திருந்தார்.
ரஃபிஸி, “லஞ்ச ஊழலுக்கு எதிரான வெறுப்பே எனை அரசியலுக்கு இட்டுச் சென்ற மிகப்பெரிய தள்ளுபடி. நாட்டில் ஊழல் இல்லையென்றால் தொழில், வளர்ச்சி, நீதிக்கு தடையில்லை என்பதை காட்டவே அரசியலில் காலடி எடுத்து வைத்தேன்” என்று வலியுறுத்தியிருந்தார்.
பழைய பதிவின் இந்தப் பகுதிகள் தற்போது மீண்டும் பகிரப்பட்டு வருகின்றன. அரசியலில் இருந்து விலகிய பின்னரும், அவரது ஊழல் எதிர்ப்பு நிலைப்பாடு இன்னும் பலரிடையே விவாதமாக உள்ளது.

























