சக மாணவரை குளியலறையில் தாக்கிய சம்பவம் தொடர்பில் 4 மாணவர்கள் கைது

கெடா, சுங்கை பட்டாணியில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் திங்கட்கிழமை காலை சக மாணவர் ஒருவர் மயக்கம் அடையும் வரை தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, 16 முதல் 17 வயதுடைய 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்டவர் தனது நண்பரை அவமானப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து மாணவர்களில் ஒருவர் கோபமடைந்து, பாதிக்கப்பட்டவரை தாக்க மற்ற மூன்று மாணவர்களை அழைத்ததாக முதற்கட்ட விசாரணைகள் கண்டறிந்துள்ளதாக கோல மூடா காவல்துறைத் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.

விசாரணையில் உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களில், படிவம் 4 மாணவர் ஒருவர் மட்டுமே இன்று முதல் மூன்று நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டதாகவும், மற்றவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். சம்பவ இடத்தில் ரகசிய கண்காணிப்பு பதிவுகள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியதாக சினார் ஹரியான் தெரிவித்துள்ளது.

செய்தி இணையதளத்தின்படி, பாதிக்கப்பட்டவர் பள்ளி குளியலறையில்  ஆசிரியரால் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டு மாணவர் சிகிச்சைக்காக சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். சிறுவனின் உடலில் காயங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here