PPP கட்சியின் முன்னாள் தலைவர் எஸ்.ஐ. ராஜா காலமானார்

கோலாலம்பூர்:

மக்கள் முற்போக்குக் கட்சியின் (PPP) முன்னாள் தலைவர் எஸ்.ஐ. ராஜா (வயது 86), நிமோனியா காய்ச்சல் காரணமாகக் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் (HKL) நேற்றிரவு காலமானார். அவரது மறைவு கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என தற்போதைய தலைவர் டத்தோ டாக்டர் லோக பாலமோகன் தெரிவித்துள்ளார்.

காலஞ்சென்ற எஸ்.ஐ. ராஜா 1978 முதல் 1982 வரை பிபிபி கட்சியின் தேசியத் தலைவராகப் பணியாற்றினார். அக்கட்சியின் நிறுவனர்களான சீனிவாசகம் சகோதரர்களின் மறைவுக்குப் பிறகு, கட்சி ஒரு இக்கட்டான சூழலில் இருந்தபோது அதனை வழிநடத்திய பெருமை இவருக்கு உண்டு.

ஒரு சிறந்த வழக்கறிஞரான இவர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும் (Senator) பணியாற்றிச் சமூகப் பணியாற்றினார். மேலும் பலவின மக்கள் தத்துவத்தைப் பின்பற்றி, கட்சியின் அடிப்படை நோக்கங்கள் மாறாமல் பாதுகாப்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

மலேசிய அரசியலில் ஒரு காலத்தில் மிக வலிமையான எதிர்க்கட்சியாகவும், பின்னர் தேசிய முன்னணியின் (BN) அங்கமாகவும் பிபிபி கட்சி திகழ்ந்தது என்றால் அது மிகையாகாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here