ஊழல் குற்றச்சாட்டில் இருந்து பங் விடுதலை : ஆனால் விதவை மனைவி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

11 ஆண்டுகளுக்கு முன்பு ஃபெல்க்ரா முதலீட்டுத் திட்டத்தில் 150 மில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறுமாறு அம்னோ தலைவர் பங் மொக்தார் ராடினின் மனைவி (விதவை) ஜிஸி இசெட் அப்துல் சமத் தாக்கல் செய்த மனுக்களை சட்டத்துறை தலைவர் அலுவககம் (AGC) நிராகரித்துள்ளது. கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து துணை அரசு வழக்கறிஞர்  சின் ஹவ் இன்று அமர்வு நீதிமன்ற நீதிபதி ரோஸ்லி அகமதுவுக்குத் தெரிவித்தார். ஏஜிசி மனுக்களை பரிசீலித்துள்ளது. எதிர்த்தரப்பு மீண்டும் தங்கள் வழக்கைத் தொடங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.

இருப்பினும், பங் மீதான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு வாபஸ் பெறுவதாக  கூறியது. இதனால் முன்னாள் கினாபட்டாங்கன் நாடாளுமன்ற உறுப்பினரும் சபாவில் உள்ள லாமாக் சட்டமன்ற உறுப்பினரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மார்ச் 5, 6 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ஜிஸி தனது வழக்கறிஞர்களால் விசாரிக்கப்படுவதற்கும், குற்றத்திற்காக அரசு தரப்பு குறுக்கு விசாரணை செய்வதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ரோஸ்லி நிர்ணயித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here