கோலாலம்பூர்: ஜின்ஜாங்கில் ஏழு வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு ஊனமுற்ற நபரின் காலில் தீக்காயங்கள் ஏற்பட்டன. மூச்சுத் திணறல் ஏற்பட்ட 41 வயது நபர், செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிற்பகல் 1.30 மணிக்கு தீயணைப்பு படை சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாகவும், நான்கு நிலையங்களில் இருந்து 46 பணியாளர்கள் மற்றும் எட்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதாகவும் நகர தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. தீ முழுமையாக அணைக்கப்பட்டது. ஆனால் ஏழு வீடுகளும் எரிந்து நாசமாகின. தீ விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது.









