அதிகாலை விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 13 UMPSA பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 28 பேர் காயமின்றி உயிர் பிழைத்தனர்

மாரான்:

கிழக்கு கடற்கரை விரைவுச்சாலையின் 161 வது கிலோமீட்டரில் இன்று அதிகாலை ஒரு டிரெய்லரின் பின்புறத்தில் பேருந்து மோதியதில், 13 மலேசியா பஹாங் அல்-சுல்தான் அப்துல்லா (UMPSA) மாணவர்கள் உட்பட இருபத்தெட்டு பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

இன்று அதிகாலை 1 மணியளவில் கோலாலம்பூர், டெர்மினல் பெர்செபாத்து செலாத்தானில் இருந்து டெர்மினல் சென்ட்ரல் குவந்தான் (TSK) நோக்கிச் சென்ற சுற்றுலாப் பேருந்தே விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 38 வயதான பேருந்து ஓட்டுநரும், 40 வயதான நிசான் லோரி ஓட்டுநரும் எந்த காயமும் அடையவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here