மாரான்:
கிழக்கு கடற்கரை விரைவுச்சாலையின் 161 வது கிலோமீட்டரில் இன்று அதிகாலை ஒரு டிரெய்லரின் பின்புறத்தில் பேருந்து மோதியதில், 13 மலேசியா பஹாங் அல்-சுல்தான் அப்துல்லா (UMPSA) மாணவர்கள் உட்பட இருபத்தெட்டு பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
இன்று அதிகாலை 1 மணியளவில் கோலாலம்பூர், டெர்மினல் பெர்செபாத்து செலாத்தானில் இருந்து டெர்மினல் சென்ட்ரல் குவந்தான் (TSK) நோக்கிச் சென்ற சுற்றுலாப் பேருந்தே விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 38 வயதான பேருந்து ஓட்டுநரும், 40 வயதான நிசான் லோரி ஓட்டுநரும் எந்த காயமும் அடையவில்லை.




















