சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து எதிரொலி: செனாப் நதியின் குறுக்கே நீர்மின் நிலையம் கட்ட மத்திய அரசு டெண்டர்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தானுடனான 1960-ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

1960 ஒப்பந்தப்படி, ஜம்மு காஷ்மீரின் சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதி நீரின் பெரும்பகுதி பாகிஸ்தானுக்குச் சென்றது. ஆனால், தற்போது இந்த நதிகளின் நீரை இந்தியா தனது தேவைகளுக்கு பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் ஆகிய கிழக்கு நதிகளின் மீது இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு. செனாப் போன்ற மேற்கு நதிகளில் இந்தியாவுக்குக் குறைந்த அளவிலான பயன்பாட்டு உரிமையே இருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் இந்தியா அந்த உரிமையை முழுமையாகப் பயன்படுத்தத் தீவிரமாக இறங்கியுள்ளது

இந்நிலையில் ராம்பன் மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே பிரம்மாண்ட நீர்மின் நிலையம் கட்டும் திட்ட பணிகளை இந்தியா துரிதப்படுத்தி உள்ளது. இதன் மூலம் 1,856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான NHPC, இந்தத் திட்டத்திற்காக ₹5,129 கோடி மதிப்பிலான டெண்டரை வெளியிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் பணிகளை முடிக்க சுமார் 9 ஆண்டுகள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏல விண்ணப்பங்கள் மார்ச் 12 முதல் மார்ச் 20 வரை பெறப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here