சிலாங்கூர், ரவாங்கில் ஒரு கோவிலை இடிக்க முயன்றதாகக் கூறப்படும் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஷாசெலி கஹார் கூறுகையில், சந்தேக நபர்கள் கோவில் நிர்வாகத்துடன் எந்த பேச்சு வார்த்தை நடத்தாமலும் அதே வேளை உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமலும் இந்து கோவிலின் ஒரு பகுதியை இடித்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து ஒரு மண்வாரி இயந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.









