டோட்டோ 4D ஜாக்பாட் 1 விளையாட்டில் RM23.53 மில்லியனை வென்ற சிலாங்கூர் தம்பதி

சிலாங்கூரைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்கள் குடும்ப உறுப்பினர்களின் அடையாள அட்டை எண்களின் கடைசி நான்கு இலக்கங்களில் பந்தயம் கட்டி, டோட்டோ 4D ஜாக்பாட் 1 விளையாட்டில் 23.53 ரிங்கிட் மில்லியனை வென்றனர். 49 வயதான ஒரு மார்க்கெட்டிங் மேலாளரும், அவரது 66 வயது காதலனும், 6777 மற்றும் 5085 எண்களை ஒரு நிலையான 2 ரிங்கிட்டை பந்தயமாக வைத்தனர்.

அந்தப் பெண் வழக்கமாக டிக்கெட்டுகளை வாங்குவதாகவும், அவரது காதலன் எண்களைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்வதாகவும் கூறினார். ஒவ்வொரு முறையும் டோட்டோ கடைக்குச் செல்லும்போது அம்மாது வழக்கமாக 200 ரிங்கிட் முதல் 300 ரிங்கிட்  வரை செலவிடுகிறாள்.

நாங்கள் பல ஆண்டுகளாக இந்த எண்களை விளையாடி வருகிறோம், அவை ஒரு நாள் எங்களுக்கு இவ்வளவு பெரிய வெற்றியைக் கொண்டு வரும் என்று நினைத்துப் பார்த்ததில்லை  என்று அவர் கூறினார். சீனப் புத்தாண்டுக்கு முன்னதாக இந்த வெற்றியை சரியான நேரத்தில் ஒரு “பெரிய பரிசு” என்று விவரித்த தம்பதியினர், தங்கள் தொழிலை விரிவுபடுத்தவும், வீடு வாங்கவும், எதிர்காலத்திற்காக சேமிப்பை ஒதுக்கி வைக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here