மலேசியாவில் e-Invoicing புரட்சி: வரி வருவாய் 29 கோடி ரிங்கிட் அதிகரிப்பு!

கோலாலம்பூர் | மார்ச் 03, 2026:

மலேசியாவில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட e-Invoicing முறை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக நிதியமைச்சகம் (MOF) தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த நிதியமைச்சகம், இதுவரை நாடு முழுவதும் 100 கோடிக்கும் (1 billion) அதிகமான e-Invoice வழங்கப்பட்டுள்ளன.

சுமார் 204,928 வணிகர்கள் இதுவரை இந்த முறையில் தங்களைப் பிணைத்துக் கொண்டுள்ளனர். இதில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SMEs) பங்களிப்பும் கணிசமாக உள்ளது.

e-Invoicing அமல்படுத்தப்பட்ட பிறகு, இதுவரை வரி செலுத்தாமல் இருந்த 17,188 வரி செலுத்துவோர் தாங்களாகவே முன்வந்து தங்கள் வருமானத்தைப் பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் சுமார் 140 கோடி ரிங்கிட் (RM1.4 billion) மதிப்பிலான மறைக்கப்பட்ட வருமானம் கணக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் விளைவாக அரசுக்குக் கூடுதலாக 29 கோடி ரிங்கிட் (RM290 million) வரி வருவாய் கிடைத்துள்ளது.

வரி ஏய்ப்பைத் தடுக்கவும், நாட்டின் நிதி நிர்வாகத்தை மேம்படுத்தவும் இந்த e-Invoicing முறை ஒரு வலுவான கருவியாக மாறியுள்ளது.

2026-ஆம் ஆண்டு முதல், ஆண்டு வருமானம் 10 லட்சம் ரிங்கிட்டிற்கும் (RM1 million) குறைவாக உள்ள வணிகர்களுக்கு e-Invoicing முறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது சிறு வணிகர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

இந்தத் திட்டம் முழுமையாக அனைத்து வணிகர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட பின்னரே, இதன் முழுமையான வெற்றி குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here