உட்லண்ட்ஸ் கேட்வே: சிங்கப்பூர் – ஜோகூர் பொருளாதார இணைப்பை வலுப்படுத்த புதிய மெகா திட்டம்!

சிங்கப்பூர்:

சிங்கப்பூருக்கும் ஜோகூர் மாநிலத்திற்கும் இடையிலான பொருளாதாரத் தொடர்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், ‘உட்லண்ட்ஸ் கேட்வே’ (Woodlands Gateway) என்ற புதிய ஒருங்கிணைந்த மாவட்டத்தை உருவாக்க சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது.

சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கான் சியோ ஹுவாங் (Gan Siow Huang) நாடாளுமன்றத்தில் இன்று வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், சுமார் 35 ஹெக்டேர் பரப்பளவில் இந்த மிகப்பெரிய வணிக மற்றும் வாழ்க்கை முறை மாவட்டம் அமையும் என்றும், இது வரவிருக்கும் ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் (RTS Link) மற்றும் வுட்லண்ட்ஸ் நார்த் (Woodlands North) எம்ஆர்டி நிலையங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்ட போக்குவரத்து மையமாகச் செயல்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த பிரம்மாண்ட திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் 2030-ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உட்லண்ட்ஸ் கேட்வே வெறும் போக்குவரத்து மையமாக மட்டுமல்லாமல், ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் (JS-SEZ) இதயமாகச் செயல்படும்:

நிறுவனங்கள் தங்கள் உற்பத்திப் பிரிவை (Manufacturing) குறைந்த செலவில் ஜோகூரில் வைத்துக்கொண்டு, தங்களின் பிராந்தியத் தலைமையகம் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவை (R&D) வுட்லண்ட்ஸ் கேட்வேயில் அமைத்துக் கொள்ளலாம்.

‘எட்மண்ட் ஆப்டிக்ஸ்’ (Edmund Optics) நிறுவனம் ஏற்கனவே இம்முறையைப் பின்பற்றி, வுட்லண்ட்ஸில் ஆராய்ச்சி மையத்தையும், ஜோகூரில் உற்பத்தி ஆலையையும் நடத்தி வருவதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here