காஜாங்கில் 11 மாத குழந்தையின் மரணம் குறித்து போலீசார் விசாரணை

காஜாங்கில் உள்ள குழந்தை பராமரிப்பாளர் வீட்டில் 11 மாத ஆண் குழந்தை இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு அறிக்கையில் காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஜெய்த் ஹசான், குழந்தை மே 9 அன்று செர்டாங் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது, அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

மே 10 ஆம் தேதி பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் மரணத்திற்கான காரணத்தை தீர்மானிக்க குழந்தை பராமரிப்பாளரிடம் இருந்து வாக்குமூலத்தையும் போலீசார் பதிவு செய்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் இன்னும் காத்திருப்பதாக ஜெய்த் கூறினார். குழந்தைகள் சட்டம் 2001 பிரிவு 31(1)(a) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

வழக்கு பற்றிய தகவல் தெரிந்தவர்கள், 019-4565502 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here